Pages

Monday, May 26, 2014

அடுத்­த­டுத்து தற்­கொலை; இலங்கையை ஆக்கிரமித்திருக்கும் “பேஸ்புக்” மோகம்



உல­க­ளா­விய ரீதியில் பேஸ்புக் வலையில் விழு­வோரின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கி­றது. இதற்கு இலங்கை மாத்­திரம் விதி ­வி­லக்­கல்ல.

பேஸ்புக் பற்றி அறிந்­து­கொண்டு அதனைப் பயன்­ப­டுத்­து­ப­வர்கள் சாத­க­மான பலன்­களை அனு­ப­விக்கும் அதே­வேளை அது­பற்றிய அடிப்­ப­டையைக் கூட அறிந்­து­ கொள்­ளாமல் பயன்­ப­டுத்­து­ப­வர்­களின் கதி ஆழம் அறி­யாமல் காலை விட்­டது போலத்தான்..!

அண்­மைக்­கா­ல­மாக பேஸ்புக் என்ற வார்த்தை இலங்­கையில் பெரிதும் பேசப்­படும் சொல்­லா­கவும் சர்ச்­சைக்­கு­ரிய தலைப்­பா­கவும் மாறி­யி­ருக்­கி­றது.

பூலோ­க­ம­ய­மா­தலின் விளை­வாக நாளுக்கு நாள் தொழில்­நுட்­பத்தின் வளர்ச்சி அதி­க­ரித்துச் செல்­வதைக் காண க்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. குறிப்­பாக இணை­யத்­த­ளங்கள், மின்­னஞ்­சல்கள், சமூக வலை­ய­மைப்­பு­க்களின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்­ப­டு­கி­றது.

ஒரு­புறம் இணைய உலகம் நாளுக்கு நாள் புதிய மலர்ச்­சி­யையும் பரி­மா­ணத்­தையும் கண்­டு­கொண்­டி­ருக்கும் அதே­வேளை, இதற்கு மாற்­றாக ஏற்­பட்­டு­வரும் எதிர்­வி­ளை­வு­க­ளையும் யாராலும் தடுக்க முடி­யா­துள்­ளது.

சமூக வலைத்­த­ளங்கள் பல இருந்­தாலும் கூட பேஸ்­புக்கின் ஆதிக்­கமே நம்­நாட்டில் மேலோங்கிக் காணப்­ப­டு­கி­றது.

ஆம்! சமூக வலைத்­த­ளங்­களில் இளை­யோரை வெகு­வாகக் கவர்ந்து வரு­கி­றது பேஸ்புக். பெரும்­பா­லான இளை­ஞர்­களின் அன்­றாடத் தேவை­களில் ஒன்­றாக இது மாறி­விட்­டது.

சுருக்­க­மாகச் சொல்­வ­தானால் பேஸ்புக் இல்லை என்றால் அன்­றைய நாளில் சுவா­ரஷ்­யமே இல்லை என்­றுதான் பலர் நினைக்­கி­றார்கள்.

பேஸ்புக் உப­யோகம் கார­ண­மாக அடுத்­த­டுத்து கிடைத்த தற்­கொலை செய்­தி­களும் அவை தொடர்­பாக தொடர்ச்­சி­யாக கிடைத்து வரும் முறைப்­பா­டு­களும் இலங்­கை­யர்­களை ஆழ­மாக சிந்­திக்க வைத்­தி­ருக்­கி­றது.

இது தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்று ‘இலங்­கையில் சமூக வலைத் ­த­ளங்­களும் முக­நூலும்: சாத­கங்கள், பாத­கங்கள், அவ­லட்­ச­ணங்கள்’ என்ற தலைப்பில் இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாபன கேட்போர் கூடத்தில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்­றது.

தேசிய மன­நல மன்­றத்தின் சார்பில் வைத்­தியர் எம். கல­பத்தி, களனி பல்­க­லைக்­கழ­கத்தின் விரி­வு­ரை­யாளர் தினித்தி ஜய­சே­கர, லங்கா சுமத்­ரயோ அமைப்பின் உறுப்­பி­னர்­க­ளான மனிஷா, ஜோமோ உதுமான் ஆகி­யோரின் கலந்­து­ரை­யா­ட­லு க்கு தலைமை வகித்­த­துடன் ஊட­க­வி­ய­லா­ளர்கள், பாட­சாலை அதி­பர்கள், சமூக ஆர்­வ­லர்கள், பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் உட்­பட பல்வேறு துறை சார்ந்­த­வர்கள் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

இளை­யோரின் வாழ்க்­கையில் பேஸ்புக் எவ்­வா­றான தாக்­கங்­களை ஏற்­ப­டுத்­து­கி­றது என்­பது குறித்து பல்­வேறு தரப்­பி­னரும் தமது கருத்­துக்­களை முன்­வைத்­தனர்.

போலி­யான பேஸ்புக் கணக்­குகள் மூலம் ஏமாற்றும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுவோர் குறித்து அங்கு கூடுதல் கவனம் செலுத்­தப்­பட்­டது.

உண்­மையில் பேஸ்புக் குறித்து இரு­வேறு கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டாலும் அதன் நன்மை, தீமைகள் குறித்து அறிந்து சுய­பா­து­காப்பை உறுதி செய்­து­ கொள்ளும் பட்­சத்தில் தீங்கு ஏதும் இல்லை என்றே சொல்­லலாம்.

களனி பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யாளர் தினித்தி ஜய­சே­கர பேஸ்புக் தொடர்­பாக பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளி­டையே இருக்கும் அபிப்­பிரா­யங்கள், பிரச்­சி­னைகள் குறித்து தயா­ரிக்­கப்­பட்ட செயற்­றிட்­டத்தை கலந்­து­ரை­யா­ட­லின்­ போது முன்­வைத்தார்.

அந்தத் தக­வல்­களின் பிர­காரம் 40 வீத­மான மாண­வர்கள் தமது கைய­டக்கத் தொலை­பேசி இலக்கம் உள்­ள­டங்­க­ளாக சுய­வி­ப­ரங்கள் அனைத்­தையும் பேஸ்­புக்கில் ஏனையோர் பார்­வை­யிடும் வகையில் காட்­சிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள்.

அதிலும் அவர்கள் அவ்­வாறு தகவல் வழங்­கி­யிருப்­பது தாங்கள் அறி­யாமல் நடந்த விடயம் என்றும் குறிப்­பிட்­டி­ருக்­கி­றார்கள்.

அவ்­வா­றெனின் பேஸ்­புக்கில் தனிப்­பட்ட தக­வல்­களை எவ்­வாறு பாது­காப்­பது என்ற விட­யத்தை அவர்கள் அறி­ய­வில்லை என்றே கொள்ள வேண்­டி­யி­ருக்­கி­றது.

இலங்­கையை பொறுத்­த­வ­ரையில் பேஸ்புக் சமூக வலைத்­த­ளத்தில் சுய­பாது­காப்­பினை உறுதி செய்­து­கொள்ளும் வகையில் பாவ­னை­யா­ளர்கள் செயற்­ப­டு­வ­தில்லை. குற்றச் செயல்கள் இடம்­பெ­று­வ­தற்கு இது முக்­கிய கார­ண­மாக இருக்­கி­றது.

வைத்­தியர் கல­பத்தி அங்கு தக­வல்­களை பரி­மா­று­கையில், பேஸ்புக் பாவ­னையில் ஈடு­படும் பாட­சாலை மாண­வர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்துச் செல்­கி­றது.

போதிய விழிப்­பு­ணர்­வின்மை கார­ண­மாக பேஸ்­புக்கில் தான்­தோன்றித்தன­மாக செயற்­ப­டும்­போது ஏற்­படும் பின்­வி­ளை­வு­களை தாங்க முடி­யா­த­வர்­க­ளாக அவர்கள் பெரும் மன உளைச்­ச­லுக்கு ஆளா­கின்­றார்கள்.

மாண­வர்­களின் எதிர்­கா­லத்தை பெரிதும் பாதிக்கக் கூடிய இவ்­வி­டயம் குறித்து பெற்­றோரும் ஆசி­ரி­யர்­களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்றார்.

பேஸ்­புக்கில் கணக்கு வைத்­தி­ருக்கும் பாட­சாலை மாண­வர்கள் நாளொன்றில் சரா­ச­ரி­யாக 2 மணித்­தி­யா­லங்­களை அதில் கழிப்­ப­தாக ஸ்ரீலங்கா சுமித்­ரயோ அமைப்பின் சார்பில் அங்கு கலந்­து­கொண்­டி­ருந்த மனிஷா கருத்து தெரி­வித்தார்.

கைய­டக்கத் தொலை­பே­சிகள் பாவ­னைக்கு வந்த ஆரம்ப காலங்­களில் அவை தவ­றான கண்­ணோட்­டத்­தி­லேயே பார்க்­கப்­பட்­டன. எனினும் தற்­போது கைய­டக்கத் தொலை­பேசி இல்­லா­த­வர்­களை காணக் கிடைப்­பதே அரிது.

அந்த வகையில் அதன் முக்­கி­யத்­துவம் அதி­க­ரித்துக் காணப்­படும் அதே­வேளை தீங்­கு­க­ளுக்கும் கார­ண­மாக அமை­வ­தையும் யாரும் மறுக்க முடி­யாது.

அதே­போன்­று தான் பேஸ்புக் தொடர்­பிலும் அதனை உப­யோ­கிப்­பது பெரும் தவ­றாகும் என்ற குற்­றச்­சாட்டு பல்­வேறு தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்தும் எழுப்­பப்­ப­டு­கி­றது.

எனினும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்­த­ளங்கள் ளுழஉயைட ஆநனயை எனும் தனி­யொரு துறை­யா­கவே மாற்றம் கண்டு தொழில்சார் வாய்ப்­பு­க­ளுடன் வளர்ச்­சி­ய­டைந்து வரு­கி­றது.

இதன்­மூலம் தீமைகள் ஏற்­ப­டு­வ­தற்கு வாய்ப்­புண்டு. எனினும் சரி­யான முறையில் கையா­ளும்­போது எதிர்­ம­றை­யான பின்­வி­ளை­வுகள் தவிர்க்­கப்­ப­டலாம் என்­பதே உண்மை.

இலங்­கையில் கடந்த ஜன­வரி, பெப்­ர­வரி மாதங்­களில் மாத்­திரம் பேஸ்புக் தொடர்­பாக 300 முறைப்­பா­டுகள் கிடைத்­தி­ருப்­ப­தாக அர­சாங்­கத்தின் தகவல் தொடர்­பாடல் தொழில்­நுட்ப முகவர் நிலை­யத்தின் கீழ் இயங்கும் இலங்கை கணனி அவ­சர தயார் நிலைக் குழுவின் சிரேஷ்ட பொறி­யி­ய­லாளர் ரொஷான் சந்­தி­ர­குப்தா தெரி­வித்தார்.

கடந்த காலங்­க­ளுடன் ஒப்­பி­டும்­போது பேஸ்­புக்கில் போலி­யான கணக்­குகள் தயா­ரித்தல் தொடர்­பி­லான குற்றச் செயல்­களே அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­கவும் பாதிக்­கப்­பட்ட பலர் முறைப்­பாடு செய்­வ­தற்கு தயங்­கு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

நண்பர் வட்­டத்­துடன் தொடர்பு இல்­லாத வேறொரு நபரை பேஸ்­புக்கில் இணைக்­கும்­போது பல்­வேறு பிரச்­சி­னைகள் எழு­கின்­றன.

காமம் கலந்த வார்த்­தை­களை மற்­றொ­ரு­வரின் தனிப்­பட்ட கணக்­குக்கு அனுப்­புதல், நிர்­வாண தோற்­ற­மு­டை­யோ­ரு­டைய தோற்­றங்­களை உண்மை முகங்­கொண்­டோ­ருக்குப் பொருத்தி புகைப்­ப­ட­மாக வெளி­யி­டுதல் உள்­ளிட்ட பல்­வேறு முறை­யற்ற செயற்­பா­டுகள் இலங்­கையில் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரு­கின்­றன.

உதா­ர­ண­மாக, கடந்த சில மாதங்­க­ளாக கிறீஸ் மனிதன் என்ற பெயரில் பேஸ்­புக்கில் உலா வரும் நபரின் செயற்­பா­டுகள் இளம் பெண்கள் பலரை மன­த­ளவில் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இந்த கிறீஸ் மனிதன் பெண்­க­ளுடன் பேஸ்­புக்கில் தனிப்­பட்ட தக­வல்­களை அனுப்பி அச்­சு­றுத்தி வரு­வ­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. இது தொடர்­பான விசா­ர­ணை­களை இலங்கை கணனி அவசர தயார் நிலைக்குழு மேற்­கொண்டு வரு­கி­றது.

அதே­போன்று ஆடைத் தொழிற்­சா­லை­யொன்றில் தொழில்­பு­ரியும் பெண்­ணொ­ருவர் அளித்­துள்ள முறைப்­பா­டொன்று அதிர்ச்­சி­ய­ளிப்­ப­தாக உள்­ளது.

அந்தப் பெண்­ணுக்கு தன்­னு­டைய பள்­ளிக்­கால நண்பர் ஒரு­வரின் பெயரில் நட்பு அழைப்பு கிடைக்­கப்­ பெற்­றுள்­ளது. அதனை ஏற்­றுக்­கொண்ட அப்பெண் பேஸ்புக் மெசேஜ் மூலம் உரை­யாட ஆரம்­பித்­தி­ருக்­கிறாள்.

இந்த நெருக்கம் நாளுக்கு நாள் அதி­க­ரிக்க இரு­வரும் முகம் பார்க்­காமல் காதல் வயப்­பட்­டுள்­ளனர். அந்தப் பெண் தன்­னு­டைய தனிப்­பட்ட படங்கள் பல­வற்றை அந்த இளை­ஞ­ருக்கு அனுப்­பி­யி­ருக்­கிறாள். எனினும் இளை­ஞரின் கைத் தொலை­பேசி இலக்­கத்தை அப்பெண் பல­முறை கேட்டும் அவர் தர மறுத்­தி­ருக்­கிறார்.

இந்­நி­லையில் ஒருநாள் இரவு வேளையில் மெசேஜ் அனுப்­பிக்­ கொண்­டி­ருக்­கும்­ போது தவ­றான வார்த்தைப் பிர­யோ­கங்­க­ளுடன் இந்த இளை­ஞ­ரி­ட­மி­ருந்து தகவல் கிடைக்­கப் ­பெற்­றி­ருந்­தது. அந்த இளைஞர் மது­போ­தையில் இருப்­ப­தா­கவும் தான் அழைக்கும் இடத்­துக்கு வரு­மாறும் கேட்­டுள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரி­வித்­துள்ளார்.

உடனே கோப­மடைந்த அந்த இளைஞர் ‘நீயும் நானும் ஒன்­றாக இருக்கும் பல புகைப்­ப­டங்கள் என்­னிடம் இருக்­கின்­றன. நீ வரா­விட்டால் அவற்றை உன் வீட்­டுக்கு அனுப்­புவேன்’ என மிரட்­டி­யுள்ளார். மறு­நி­மி­டமே இளைஞர் ஒரு­வ­ருடன் அந்தப் பெண் ஒன்­றாக இருக்கும் பல படங்கள் மெசேஜ் மூல­மாக அவ­ளுக்கு கிடைக்­கப் ­பெற்­றுள்­ளன.

அந்த இளைஞர் தன்­னு­டைய பள்­ளிக்­கால நண்பர் அல்ல என்­பதை அறிந்து கொண்ட அதே­வேளை தான் அனுப்­பிய படங்­களை கணனி தொழில்­நுட்­பங்­களின் மூல­மாக அந்த இளை­ஞ­ரோடு இணைத்­தி­ருந்­தமை தெரி­ய­ வந்­தது.

உட­ன­டி­யாக அந்தப் பெண் முறைப்­பாடு செய்­ததன் கார­ண­மாக போலி­யான பெயரில் இயங்­கிய அந்த பேஸ்புக் கணக்கு முடக்­கப்­பட்­டது.

இது­மாத்­தி­ர­மல்ல, பேஸ்புக் கணக்­கு­களின் கட­வுச்­சொல்­லினை திரு­டுதல், ஒரே பெயரில் இன்­னு­மொரு கணக்­கினை உரு­வாக்­குதல், அவ­சி­ய­மற்ற தொடுப்­பு­களை ஏனை­யோருக்கு அனுப்­புதல், தர­வேற்­றப்­படும் புகைப்­ப­டங்­களை தவ­றான முறையில் பயன்­ப­டுத்­துதல் உள்­ளிட்ட பல்­வேறு குற்றச் செயல்கள் தொடர்ச்­சி­யாக பதிவு செய்­யப்­ப­டு­கின்­றன.

இவ்­வா­றான குற்றச் செயல்கள் இடம்­பெ­று­வ­தற்கு என்ன காரணம்?

சமூக வலைத்­த­ளங்கள் குறிப்­பாக பேஸ்­புக்­கினை எவ்­வாறு பயன்­ப­டுத்த வேண்டும் என்ற அடிப்­படை அறிவை கணக்கு உரு­வாக்­கு­வ­தற்கு முன்னர் பெற்­றுக்­ கொள்ள வேண்­டி­யது மிக­மிக அவ­சி­ய­மாகும்.



***எவ்வாறு தவிர்க்கலாம்?…

தேவை­யற்ற தொடுப்­புகள் கோப்­பு­களை சொடுக்கும் போதும், தர­வி­ரக்கம் செய்­யும்­ போதும் இரு­முறை சிந்­தித்தல்.

பயனர் கணக்கு, கடவுச் சொற்­களை தனிப்­பட்ட ரீதியில் பேணுதல்.

கட­வுச்­சொல்லை இலக்­கங்கள், குறி­யீ­டு­க­ளுடன் கூடி­ய­தாக உரு­வாக்­குதல்.

தேவை­யற்ற, தெரி­யாத நபர்கள் குறித்து கவ­ன­மாக இருத்தல் குறிப்­பாக சமூக வலைப்­பின்­னல்­களில் போலிப் பெயர்­களில் விடுக்­கப்­படும் அழைப்­பு­களை தவிர்த்தல்.

போலி­யான பெயர்­களில் காணப்­படும் வைரஸ் எதிர்ப்பு கோப்­புகள் தொடர்பில் அறிந்­து­ வைத்­தி­ருத்தல்.

நேர்­மை­யா­னோரை மாத்­திரம் இனங்­கண்டு தக­வல்­களை பரி­மா­றுதல்.

சமூக வலை­ய­மைப்­பு­க­ளைப்­ போல வடிவ­மைக்­கப்­பட்டு உரு­வாக்­கப்­பட்­டுள்ள போலி வலை­ய­மைப்­புகள் தொடர்பில் விழிப்­பு­ணர்­வுடன் இருத்தல்.

இணை­யத்­த­ளங்கள், புதிய தொழில்­நுட்ப மாற்­றங்கள் பற்றி அறிதல்.

வீடியோ அழைப்­பு­களை மேற்­கொள்­ளு­கையில் அவ­தானம்….

ஆகிய வழி­மு­றை­க­ளையும் பாது­காப்­பான நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்வதன் மூலம் குற்­றச்­செ­யல்­களைத் தவிர்க்கக் கூடி­ய­தாக இருக்கும்.

இவை தவிர பேஸ்­புக்கில் கணக்கினை உருவாக்கும் போது எந்தெந்த தனிப்பட்ட தகவல்களை (விலாசம், தொலைபேசி இலக்கம், ஏனையவை) கொடுக்கலாம் என்பதை தீர்மானிக்க வேண்டும்.

தனிப்பட்ட படங்களை தரவேற்றும் போது நெருங்கிய நண்பர்கள் மாத்திரம் பார்க்கும் வண்ணம் செய்முறை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இணைய உலகின் வளர்ச்சியை நோக்கும் அதேவேளை மறுவிளைவுகளையும் நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். புதிதாக முளைக்கும் அச்சுறுத்தல்களை எவ்வாறு எதிர்நோக்குவது என்பதில் கவனம் கொள்ள வேண்டும்.

நடைமுறை உலகில் இளம்பராயத்தினர் தெரிந்தோ, தெரியாமலோ இணைய உலகிற்குள் வெகு சீக்கிரமாக உள்வாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே இணையக் குற்றங்கள், விதி முறைகள் குறித்து அறிந்து வைத்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறியே.

இலங்கையில் இணையக் குற்றங்கள் தொடர்பில் இலங்கை கணனி அவசர தயார் நிலைக் குழுவினரிடம் முறைப்பாடு செய்யலாம்.
தொலைபேசி இலக்கம் – 11 269 1692

எது எவ்வாறாயினும் “எமது பாதுகாப்பு எமது கையில்” என்ற கருப்பொருளை வாழ்வோடு பின்னிப்பிணைந்து விட்ட இணையத்தள, சமூக வலையமைப்புகளை உபயோகப்படுத்துகையில் சிந்திக்க வேண்டியது கட்டாய தேவையாகும்.

0 comments

Post a Comment